Friday 4 April 2014

வைகோவின் வீழ்ச்சி






                          ம.தி.மு.க தலைவர் வைகோ தமிழக மக்களின் குட் புக்கில் இருக்கும் வெகு சில அரசியல்வாதிகளில் முதன்மையானவர். எம்.ஜி.ஆர் விலகியபோதே தளராத தி.மு.க , வைகோ வெளியேறிய போது ஆடி தான் போனது.  அந்த தாக்கத்தை தக்க வைத்து கொண்டு மாபெரும் அரசியல் இயக்கமாக வளர அவரால் முடியாமல் போனது. ஆனாலும், ஊழல் கறை படியாதவர், தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று அனைவராலும் மதிக்கப்படுபவர்.
                         வைகோ மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஈழத்தை வைத்து அரசியல் நடத்துபவர் என்பதும் அவரது சமீப கால மதுவிலக்கு போராட்டங்கள் பா.ம.கவின் நீண்ட கால கொள்கையை காப்பி அடித்து செய்யப்படுபவை என்பதும் அவற்றுள் முதன்மையானவை. எனினும், ராஜீவ் கொலை வழக்கில் மூவர் விடுதலைக்கு அவரின் அரும்பணி யாராலும் மறுக்க முடியாதது.
                         வைகோ என்றாலே எல்லோருக்கும் நினைவு வருவது அவரது பேச்சாற்றல் தான். வழக்கறிஞருக்கு பேச கற்று தர வேண்டியது இல்லை என்றாலும் அவரிடம் இயல்பாகவே பேச்சாற்றல் ததும்பி நிற்கும். வடுக வந்தேறிகள் அடைப்பிற்குள் அவரும் இன்று சிறைப்பட்டாலும் அவர் தமிழில் குறை என்பது இருக்காது. 
                    திராவிட போர்வையில் வந்தேறிகளும் தமிழ் கொண்டே எம் நிலத்தை, அதிகாரத்தை ஆக்கிரமிக்க முடிந்தது. அதுவே எம் தமிழின் வலிமை.
இன்று குத்தாட்டங்களும், ஆபாச பேச்சுக்களும் விரவி நிற்கும் அரசியல் மேடைகளில் தங்கு தடையின்றி தமிழ் ஒலித்த பொற்காலத்தின் மிச்சம் வைகோ. ( கலைஞரின் பேச்சுக்கள் பழைய பொலிவை இழந்துவிட்டன). 
                    அப்படிப்பட்டவரின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்து இன்றும் அதே பாணியில் செயல்பட்டு அவுட் டேடட் ஆகி காமெடி பீசாக நிற்பதில் டி.ராஜேந்தரை நினைவுபடுத்துகிறார். தமிழ்தேசிய இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக ஒரு ரிட்டயர்ட் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தேர்தல் நேரங்களில் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. முன்பு கழுத்து பிடித்து தள்ளாத குறையாக அதிமுக கூட்டணியில் இருந்து அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேறினார். இன்று ஊருக்கு முன் பாஜக கூட்டணியில் துண்டு போட்டு அமர்ந்து விட்டார். இவருக்கு பின்னால் கூட்டணியில் சேர்ந்த பா.ம.கவும் முந்தா நாள் முளைத்த காளானான தேமுதிகவும் தொகுதி பங்கீட்டில் புஜபல பராக்கிரமத்தை காட்டி போட்டியிட, கொடுத்ததை வாங்கி கொண்ட நல்ல பிள்ளையாக அமைதியாக இருந்து விட்டார். Beggars can't be choosers என்று நினைத்தாரோ என்னவோ.
                      இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் அமைந்து விட்டது அவருக்காக விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் இந்த படம்.

                            
                                     சிங்கம் இளைச்சா சுண்டெலி ஏறி விளையாடும்













                              பாராளுமன்றம் முதல் ஐரோப்பிய யூனியன் வரை கர்ஜிக்கும் வைகோ ஓர் பொம்மை போல் வணக்கம் தெரிவித்தும், கைகூப்பியும் அடக்க ஒடுக்கமாக நிற்க, ஒரு வரி தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியாத விஜயகாந்த் அவருக்காக பேசி வாக்கு சேகரித்து வருவது காலக்கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். 
                            வைகோ.அவர்  பெயரை போலவே கால ஓட்டத்தில் சுருங்கி நிற்கிறது அவரின் ஆளுமையும். 


No comments:

Post a Comment